“பாஜக, தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது” – சஞ்சய் தத் குற்றச்சாட்டு

 

“பாஜக, தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது” – சஞ்சய் தத் குற்றச்சாட்டு

ஈரோடு

பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று மாலை நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், அவர், பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவினர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாஜக-வினரிடம் அமைதி காத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து விட்டதாகவும், இதனால், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.