சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஈரோடு

ஈரோட்டில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு கொல்லம்பாளையம் எல்.ஜி.ஜி.எஸ் காலனியை சேர்ந்தவர் யஸ்வந்த் (21). இவர் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு யஸ்வந்த், தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சித்தோடு நோக்கி சென்றுள்ளார்.

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஈரோடு சத்திரோடு சூலை அடுத்த கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை யஸ்வந்த் முந்த முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வாகனத்தின் மீது மோதிய அவர், சாலையில் சரிந்து விழுந்து படுகாயமடைந்தார். அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.