தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

 

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

கொரோனா பரவல் காரணமாக கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

கொரோனா நோய் தொறு பரவல் ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொற்றை தடுக்க அரசு சார்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.