காதல் தோல்வியால் பொறியியல் மாணவர் தற்கொலை!

 

காதல் தோல்வியால் பொறியியல் மாணவர் தற்கொலை!

விருதுநகர்

சாத்தூர் அருகே காதல் தோல்வியால் பொறியியல் கல்லூரி மாணவர் வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அழகுமுருகன் (19). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அழகுமுருகன், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளார்.

காதல் தோல்வியால் பொறியியல் மாணவர் தற்கொலை!

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அழகுமுருகன், நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த அழகு முருகன், டிக்டாக் செயலியில் ஏராளமான வீடியோக்கள் பதிவிட்டுள்ளதும், இறப்பதற்கு முன்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.