செக்ரெட்டரி வேலைக்கு வந்த பெண் -வலை விரித்த தொழிலதிபர் -அடுத்து பத்தாவது மாடியில் நடந்த பயங்கரம்

 

செக்ரெட்டரி வேலைக்கு வந்த பெண் -வலை விரித்த தொழிலதிபர் -அடுத்து பத்தாவது மாடியில் நடந்த பயங்கரம்

தன்னிடம் வேலை பார்க்கும் பெண் செக்ரெட்டரியை பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்

செக்ரெட்டரி வேலைக்கு வந்த பெண் -வலை விரித்த தொழிலதிபர் -அடுத்து பத்தாவது மாடியில் நடந்த பயங்கரம்


உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒரு மிகப்பெரிய பால் பண்ணை நடத்தி வருகிறார் .அவருக்கு 19 வயதான பெண்ணொருவர் உதவியாளராக பணிபுரிகிறார் .
அந்த தொழிலதிபர் அந்த செக்ரெட்டரி பெண் மீது மோகம் கொண்டு அலைந்தார் .அதனால் அவரை எப்படியாவது அடைய வலை விரித்தார் .ஆனால் அந்த பெண் அவரின் ஆசைக்கு அடிபணியாமல் அவரிடம் சிக்காமல் தப்பித்து வந்தார் .அதனால் அந்த தொழிலதிபர் அந்த பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை சில உத்தியோகபூர்வ வேலைகளின் பேரில் கல்யாண்பூரில் உள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்,
அங்கு அவர் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆசையை கூறினார் .ஆனால் அந்த பெண் அவரின் பாலியல் ஆசைக்கு ஒத்துழைக்காமல் தப்பியோட முயற்சித்தார் .பிறகு அவர் பணம் கொடுப்பதாக அந்த பெண்ணுக்கு ஆசை காமித்தார் .அப்போதும் அந்த பெண் மறுத்ததால் அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் .பிறகு அவர் அந்த பெண்ணை தன் குடியிருப்பின் பத்தாவது மாடிக்கு இழுத்து சென்று அங்கிருந்து தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார் .
பின்னர் போலீசுக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்து அந்த தொழிதிபரிடம் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அவர் முதலில் மறுத்தாலும் பிறகு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்
பின்னர் அந்த குற்றவாளி கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு ,அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.