மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்

 

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மின் இணைப்பை துண்டித்தபோது தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் படுகாயமடைந்தார். திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட் மாநகராட்சி உத்தரவின் படி இன்று முதல் உறையூர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மார்க்கெட்டில் இயங்க தொடங்கியது.

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்
மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்
மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்

இதனை அடுத்து புத்தூர் பழைய மீன் மார்க்கெட்டில் மின்சாரம் துண்டிக்கும் பணி நடைபெற்று வந்தது. மின்வாரிய ஊழியர் ஜீவானந்தம் (48) என்பவர் மின் கம்பத்தில் ஏறி மின்சாரம் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்ததில், ஜீவானந்தம் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு போலீசார் உடனடியாக முதலுதவி அளித்து, அருகில் இருந்து தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் படுகாயம்