‘வட்டிக்கு வட்டி விவகாரம்’… முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம்!

 

‘வட்டிக்கு வட்டி விவகாரம்’… முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம்!

இஎம்ஐ செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடும் விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, மாத தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி போடப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இஎம்ஐ கடனை செலுத்தும் கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அண்மையில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், வட்டிக்கு வட்டி முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

‘வட்டிக்கு வட்டி விவகாரம்’… முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம்!

அதே போல, ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோர் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க மீண்டும் நீதிபதிகள் அவகாசம் கொடுத்துள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடனை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என்ற உத்தரவு தொடரும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.