நெல்லை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

 

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

நெல்லை

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மழையில் சேதமடைந்த மின்கம்பிகளை சிரமைத்தபோது, மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் (53). எலக்ட்ரீசியன். நேற்று நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், திருக்குறுங்குடி புதுத்தெருவில் உள்ள முத்துசுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின் ஒயர்கள் அறுந்து சேதமடைந்தன.

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

இதனையடுத்து, மின்கம்களை சீரமைக்கும் பணியில், மின்வாரிய அதிகாரிகள் ஈடுட்ட நிலையில், அவர்களுடன் பரமசிவனும சீரமைப்பு பணி செய்து வந்தார். அப்போது, மின்ஒயரை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக பரமசிவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.