தேர்தலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!

 

தேர்தலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், 1 முதல் 5ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும்? எந்த வழியாக செல்லும் என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு;

மாதாவரம் புதிய பேருந்து நிலையம் – ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கேகே நகர் பேருந்து நிலையம் – ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தேர்தலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!

தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம்- கும்பகோணம், தஞ்சாவூர் வழி (விக்கிரவாண்டி, பண்ருட்டி)

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பர,ம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

தேர்தலுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!

புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு – மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.

பொதுமக்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இணையதள வசதியை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.