சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

 

சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பிரகாஷ், “அரசு இடங்களில் தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி இல்லை. தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று வைத்து கொள்ளலாம். சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். பேனர்கள், பிரசுரங்கள் அடிக்கும்போது கண்டிப்பாக அச்சகத்தின் பெயர், விவரம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

அரசியல் கட்சிகள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றும் பணி தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 700 இடங்களிலும், பெரம்பூர் தொகுதியில் 228 இடங்களிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 90 இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும் 335 இடங்களில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன” எனக் கூறினார்.