கோபி தொகுதியில் 8-வது முறையாக அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி!
May 2, 2021, 19:09 IST1619962773000
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 8-வது முறையாக வெற்றி பெற்றார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் திமுக வேட்பாளர் ஜி.வி. மணிமாறன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுக்களும் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் 29 ஆயிரத்து 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து, கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8-வது முறையாக வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.