இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு.
Oct 24, 2020, 18:27 IST1603544220000
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதியை சேர்ந்தவர் பிரவீன் வயது(23). இவர் நத்தத்தில் இருந்து சமுத்திராபட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மெய்யம்பட்டி பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற காந்திநகரை சேர்ந்த வெள்ளைகண்ணு(60) என்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைகண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.