நெல்லை அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு

 

நெல்லை அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு

நெல்லை

நெல்லை அருகே சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த கானார்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கோயில்பிள்ளை (75). இவர் நேற்று காலை அங்குள்ள சங்கரன்கோயில் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, முதியவரின் மீது மோதியது.

நெல்லை அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் சாலையில் தூக்கிவீசப்பட்ட கோயில்பிள்ளை பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கோயில் பிள்ளை உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மானூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.