“பண்பாளர் விஜயபாஸ்கர்… எட்டப்பன் செந்தில்பாலாஜி” – தூபம் போட்ட எடப்பாடி!

 

“பண்பாளர் விஜயபாஸ்கர்… எட்டப்பன் செந்தில்பாலாஜி” – தூபம் போட்ட எடப்பாடி!

கரூரில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் செந்தில் பாலாஜிக்கும் பெரும் யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது. நீ முந்துவதா நான் முந்துவதா என போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த யுத்தத்திற்க்குத் தூபம் போட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. கரூர் தொகுதிக்குச் சென்ற அவர் விஜயபாஸ்கரை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “கரூர் தொகுதியில் போட்டியிடும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகச் சிறந்த உழைப்பாளி. அனைவரையும் மதிக்க கூடிய நல்ல பண்பாளர். கரூர் தொகுதியில் எந்தக் கிராமத்தை கேட்டாலும் துல்லியமாகச் சொல்லக்கூடியவர்.

“பண்பாளர் விஜயபாஸ்கர்… எட்டப்பன் செந்தில்பாலாஜி” – தூபம் போட்ட எடப்பாடி!

கரூரில் விலைமதிக்க முடியாத நிலம் திமுகக்காரர்கள் கண்ணில் பட்டுவிட்டால் அதை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி. கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறியவர். பச்சோந்தியாக இருக்கும் அவரை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்” என்றார்.