தேசிய நல்லாசிரியர் விருது- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

தேசிய நல்லாசிரியர் விருது- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நல்லாசிரியர் விருதுக்காக விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய நல்லாசிரியர் விருது 2020″க்கு தேர்வான சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரஸ்வதி, சத்தியமங்கலம் அரசுமேல்நிலை பள்ளி ஆசிரியர் திரு.திலீப் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றும் இவர்களது பணி மென்மேலும் சிறக்கட்டும்!” எனக் கூறினார்.