பிரதமர் மோடி சோதனையான தருணத்திலும் திறமையாக ஆட்சி செய்துவருகிறார்- முதல்வர் பழனிசாமி

 

பிரதமர் மோடி சோதனையான தருணத்திலும் திறமையாக ஆட்சி செய்துவருகிறார்- முதல்வர் பழனிசாமி

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி சோதனையான தருணத்திலும் திறமையாக ஆட்சி செய்துவருகிறார்- முதல்வர் பழனிசாமி

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும், அதிக இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. காவிரி குண்டாறு திட்டம், சரபங்கா திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் ஆதார திட்டங்களை நிறைவேற்றி வரும் அரசு தமிழக அரசே. பிரதமர் மோடி சோதனையான தருணத்திலும் மிகத்திறமையாக ஆட்சி செய்து வருகிறார். அவருடைய கடுமையான முயற்சிக்கு தமிழகம் துணை நிற்கும். வல்லரசு நாடுகள் பாராட்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது. கொரோனா தடுப்பில் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழுமையாக துணை நிற்கும். தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” எனக் கூறினார்.