முதல்வருடன் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சந்திப்பு

 

முதல்வருடன் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சந்திப்பு

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

முதல்வருடன் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சந்திப்பு

இந்நிலையில் தற்போது மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முதல்வரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். வரும் 6ம் தேதி சென்னை வரும்படி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் மேலூர் பெரியபுள்ளான், உசிலம்பட்டி நீதிபதி உள்ளிட்டோரும் நாளை முதல்வரை சந்திக்க உள்ளனர்.