வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதல்வர் பழனிசாமி!

 

வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதல்வர் பழனிசாமி!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது  குருபூஜை வரும் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், ஆளில்லா விமானம் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதல்வர் பழனிசாமி!

இந்நிலையில் வரும் 29-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்