கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் பயணம்!

 

கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் பயணம்!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தும் வழங்கியும், புதிய திட்டங்களை அறிவித்தும் வருகிறார்.

கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் பயணம்!

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார். 20-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும், 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.