18 பேர் பலியானதன் எதிரொலி: கோழிக்கோட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை

 

18 பேர் பலியானதன் எதிரொலி: கோழிக்கோட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்காலங்களில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி இரவு துபாயில் இருந்து 191 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

கனமழையினால் வானிலை சரியில்லாததால் பல மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்த அந்த விமானம், பின்னர் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் வழுக்கிச்சென்று 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் விமானம் இரண்டாக உடைந்தது. 2 விமானிகள் உள்ளிட்ட 18 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர். அதனால் இனி, மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை விதித்துள்ளது விமானத்துறை இயக்குநரகம்.