மீண்டும் நடைமுறைக்கு வரும் இ- பாஸ்

 

மீண்டும் நடைமுறைக்கு வரும் இ- பாஸ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

மீண்டும் நடைமுறைக்கு வரும் இ- பாஸ்

இன்று தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில், “வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்

இ- பாஸ் முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.