“எங்களையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க” – போனில் அலறி துடித்த துர்கா ஸ்டாலின்!

 

“எங்களையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க” – போனில் அலறி துடித்த துர்கா ஸ்டாலின்!

கடந்த இரு வாரத்திற்கு முன்னர் தமிழ்நாட்டில் கொரோனா அதிதீவிரமாக பரவியது. கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்தது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் தொற்று பரவல் உக்கிரமாக இருந்தது. கோவை மாவட்டம் சென்னையை முந்திச் சென்றது. இதனால் தனிக் கவனம் செலுத்தி அம்மாவட்டத்தைக் கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

“எங்களையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க” – போனில் அலறி துடித்த துர்கா ஸ்டாலின்!

ஏற்கெனவே கோவைக்கு நேரடியாகச் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார். இரண்டாம் முறையாக மே மாதம் 30ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். காலையில் திருப்பூர் சென்ற ஸ்டாலின் பின்னர் கோவைக்குச் சென்றார். கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா வார்டுக்குள் நான் போக வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

Image

இதை அவர் சொன்னவுடன் அங்கிருந்த மருத்துவர்கள் அலறிவிட்டார்களாம். ஸ்டாலினின் வயதுக்கு கொரோனா வார்டுக்குள் செல்வது மிக மிக அபாயமானது. விளையாட்டான காரியம் அல்ல. இதனை பல முறை மருத்துவர்கள் ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தனது முடிவில் மாறாமல் ஸ்டாலின் நான் உள்ளே போயே தீருவேன் என்று கூறியிருக்கிறார். சாதாரண பிபிஇ கிட் தான் இப்போது கைவசம் உள்ளது. கூடுதல் பாதுகாப்புடன் கூடிய பிபிஇ கிட் இல்லையே என்று சொல்லி ஸ்டாலினை தடுக்க நினைத்துள்ளார்கள்.

May be an image of standing and indoor

ஆனால் அவர் கேட்பதாய் இல்லை. பின்னர் சாதாரண பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றாராம். இந்தத் தகவல் தெரிந்ததுமே ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட அவரது மனைவி துர்கா ஸ்டாலின், “எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க” என்று கூறி அழுதேவிட்டாராம். இதுதொடர்பாக அப்போதே விளக்கமளித்த ஸ்டாலின், “கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்” என்றார்.