வேட்பு மனுத்தாக்கல் செய்ய துரைமுருகன், டி.ஆர் பாலு அண்ணா அறிவாலயம் வருகை!

 

வேட்பு மனுத்தாக்கல் செய்ய துரைமுருகன், டி.ஆர் பாலு அண்ணா அறிவாலயம் வருகை!

திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுதாக்கல் செய்ய துரைமுருகனும் டிஆர் பாலுவும் அறிவாலயம் சென்றுள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முக ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது திமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த துரைமுருகனுக்கு திமுக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் திமுக பொதுச் செயலாளராக இருந்து பேராசிரியர் அன்பழகன் காலமானதால், அவரது பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டது. அதனால் திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய துரைமுருகன், டி.ஆர் பாலு அண்ணா அறிவாலயம் வருகை!

மேலும் திமுக பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு ரூ.25,000 செலுத்தி இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் 5 ஆம் தேதி வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திமுகவின் பொருளாளர் பதவி ஆ.ராசாவுக்கும் பொதுச் செயலாளர் பதவி துரைமுருகனுக்கும் வழங்கப்படும் என பேசப்பட்டு வந்தது. ஆனால், தான் பொருளாளர் பதவிக்கு போட்டியிட போவதுமில்லை மனுவை வாங்கப்போவதும் இல்லை என ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் தெரிவித்து விட்டனர்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய துரைமுருகன், டி.ஆர் பாலு அண்ணா அறிவாலயம் வருகை!

இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் வேட்பு மனுதாக்கல் செய்ய அண்ணா அறிவாலயம் சென்றுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் இரண்டு பேரும் திமுகவின் முக்கிய பதவியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளனர்.