ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற டிடிவி தினகரன் -விஜயலட்சுமி உடலுக்கு நேரில் அஞ்சலி

 

ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற டிடிவி தினகரன் -விஜயலட்சுமி உடலுக்கு  நேரில் அஞ்சலி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவால் பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் இருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற டிடிவி தினகரன் -விஜயலட்சுமி உடலுக்கு  நேரில் அஞ்சலி

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினர். முதல்வர் மு. க. ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். மனைவியின் பிரிவால் கண்கலங்கி நின்ற பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறிவந்தார் ஸ்டாலின்.

சசிகலா நேரில் சென்று பன்னீர் செல்வதற்கு ஆறுதல் கூறினார். அப்போது மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் கண்கலங்கிய பன்னீர்செல்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு அவரைத் தேற்றினார் சசிகலா. சீமான் உள்ளிட்ட பலரும் பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

இதன் பின்னர் இறுதி சடங்குக்காக பொது மக்களின் அஞ்சலிக்காக விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று விஜயலட்சுமி உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கே கண் கலங்கி நின்றிருந்த பன்னீர்செல்வத்தின் கைகளை பிடித்துக்கொண்டு அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்.