நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… கொலையில் முடிந்த துயரம் !

 

நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… கொலையில் முடிந்த துயரம் !

19 வயது இளைஞர் ஒருவர் தனது இரு நண்பர்களால் குடிவெறியில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் சோழவந்தான் பகுதியின் தெற்கு தெருவில் வசிக்கும் ஸ்ரீதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் முள்ளிப்பள்ளத்தில் வசிக்கும் கே.சங்கரன் (18), எஸ்.கோபாலகிருஷ்ணன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சோழவந்தானைச் சேர்ந்த ஒரு ஒரு தேங்காய் கமிஷன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, மூவரும் முள்ளிப்பள்ளம் கல்லறையில் வைத்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… கொலையில் முடிந்த துயரம் !

அறிக்கையின்படி, இறந்த போன இளைஞன் தனது தனது சொந்த செலவுகளுக்கு சிறிது பணம் தேவைப்படுவதாக இரு நண்பர்களிடம் கேட்டுள்ளார். தங்களிடம் பணம் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் செல்போன்களை விற்று பணம் தருமாறு ஸ்ரீதர் கூற அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் எரிச்சலடைந்த ஸ்ரீதர் மது பாட்டிலால் குத்திவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட சலசலப்பில் மற்ற இருவரும் ஸ்ரீதரை குத்திவிட்டு அங்கிருந்துக்கு ஓடிவிட்டனர். ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற ஒருவர் சடலத்தைப் பார்த்ததும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் தப்பிச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.