வெளியூர் சென்ற கடற்படை கணவர் -தனியாக இருந்த மனைவி -மசாஜ் செய்யும் சாக்கில் நடந்த விபரீதம்

 

வெளியூர் சென்ற கடற்படை கணவர் -தனியாக இருந்த மனைவி -மசாஜ் செய்யும் சாக்கில் நடந்த விபரீதம்

கடற்படை ஊழியரின் மனைவியை அவரின் நண்பர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .

வெளியூர் சென்ற கடற்படை கணவர் -தனியாக இருந்த மனைவி -மசாஜ் செய்யும் சாக்கில் நடந்த விபரீதம்

மகாராஷ்டிராவின் மும்பையில் கொலாபா பகுதியில் ஒரு கடற்படை ஊழியர்கள்  வாடகை குடியிருப்பில் இரு கடற்படை ஊழியர்கள் தங்கியிருந்தனர் .அதிலொருவர் கல்யாணமாகி தன்னுடைய மனைவியோடு இருந்தார் .மற்றொருவர் பேச்லராக இருந்தார் .இருவரும் நண்பர்கள் .

இந்நிலையில் அந்த கல்யாணமான கடற்படை வீரர்  திடீரென கேரளாவில் பயிற்சிக்கு சென்று விட்டார் .அப்போது அவரின் மனைவி மட்டும் தனியாக இருந்தார் .இதையறிந்த அந்த கல்யாணமாகாத நண்பர் அந்த பெண்ணின் வீட்டிற்கு கடந்த ஏப்ரல் 29ம்  தேதி வந்தார் .அப்போது அவர் தான் துபாய் சென்றபோது சில விலையுயர்ந்த சாக்லேட்டுகள் மற்றும் பானங்களை வாங்கி வந்ததாக கூறி அதை அந்த பெண்ணிடம் கொடுத்தார் .பின்னர் தனக்கு தலை வலிப்பதாக கூறி  அந்த பெண்ணை மஸாஜ் செய்ய சொன்னார் .அதன் பிறகு அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் .இந்த விஷயத்தை  வெளியே சொன்னால் அவரின் கணவரை போலியான வழக்கில் சிக்கவைத்து கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றார் .ஆனால் அந்த  பெண் தைரியமாக தன்னுடைய கணவரிடம் இதை கூறிவிட்டார் .அதை கேட்டு அதிர்ந்த அந்த கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில அந்த  நண்பர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அவர் மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து  வருகின்றனர் .