போதை மருந்து விவகாரம்- தீபிகா படுகோன் மேனேஜருக்கு சம்மன் !
போதை மருந்து பயன்படுத்தும் விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோன் மேனேஜருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், அந்த மரணத்தில் போதை மருந்து தொடர்பு இருப்பதை கண்டறிந்த நிலையில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரபர்த்தியை கைது செய்தனர். அதையடுத்து நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கைது செய்து அவர்களையும் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவாத் கூறிய விமர்சனம், மாநிலங்களை வரை எதிரொலித்தது. மும்பையில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் காரணமாக தற்போது தீபிகா படுகோனின் மேனேஜரை விசாரணைக்கு ஆஜராக கூறியுள்ளனர். சமீபத்தில் அந்த உரையாடலை வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
தீபிகாவை டிவிட்டரின் சீண்டியுள்ள கங்கனா, ”போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள், தங்கள் மேனேஜர்களிடம் பொருள் இருக்கிறதா என கேட்பார்கள்” என நேரடியாகவே சீண்டியிருந்தார். முன்னதாக, சுஷாந்த் சிங் மரணத்தின்போது, அது குறித்து கருத்து தெரிவித்த தீபிகா, ”சுஷாந்த் சிங் மரணம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக” தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Repeat after me, depression is a consequence of drug abuse. So called high society rich star children who claim to be classy and have a good upbringing ask their manager ,” MAAL HAI KYA?” #boycottBollywoodDruggies #DeepikaPadukone https://t.co/o9OZ7dUsfG
— Kangana Ranaut (@KanganaTeam) September 21, 2020
இந்த நிலையில்தான், தற்போது போதை தடுப்பு பிரிவு போலீசார் ’டேலண்ட் ஏஜென்சி’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தீபிகா மேனேஜருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.