சிறந்த கல்வி பணியாற்றிய நல்லாசிரியர்கள் 385 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – அரசு அறிவிப்பு!

 

சிறந்த கல்வி பணியாற்றிய நல்லாசிரியர்கள் 385 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – அரசு அறிவிப்பு!

ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த கல்விப் பணியாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

சிறந்த கல்வி பணியாற்றிய நல்லாசிரியர்கள் 385 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – அரசு அறிவிப்பு!

1997ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இவ்விருதை வழங்கி வருகிறது. ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் சென்னையில் முதலமைச்சரால் அல்லது அமைச்சரால் நல்லாசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுபவா்களுக்கு வெள்ளியிலான பதக்கம், சான்றிதழ், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு 375 ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த கல்வி பணியாற்றிய நல்லாசிரியர்கள் 385 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – அரசு அறிவிப்பு!

அதேபோல இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியானவர்கள் இல்லை. 5 ஆண்டு கல்வி பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.