’10ம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி குறிப்பு இல்லை’ – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 

’10ம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி குறிப்பு இல்லை’ – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

10ம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழியை திணிப்பதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் சூழலில், 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் திறன் அறிவோம் என்ற குறுவினா ஒன்றில் ” இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக” என கேள்விக் கேட்கப்பட்டிருந்ததாக தகவல்களும், சில புகைப்படங்களும் வைரல் ஆனது. பள்ளிக்கல்வித்துறை மாணவர்களிடையே இந்தியை திணிப்பதாக சமூக வலைத்தளத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

’10ம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி குறிப்பு இல்லை’ – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

இந்த நிலையில், 10ம் வகுப்பு பாடப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர 3ஆவது மொழியாக கற்க விரும்பும் மொழி எது? அதற்கான காரணம் எழுது என்று தான் கேள்விக் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்தி திணிப்பு தொடர்பான தகவல் உண்மை இல்லை என்றும் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் அதில் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.