சாலைகளில் குப்பை கொட்டுபவர்களின் வீடு தேடி வரும் குப்பை!
Nov 7, 2020, 19:32 IST1604757757000
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சாலையில் குப்பைக் கொட்டுபவர்களை தண்டிக்கும் விதமாக அவர்களது வீட்டுக்கே சென்று வாசலில் குப்பைகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
காக்கிநாடாவில் தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் நோய் பரவுவதை தடுக்க சாலைகளில் குப்பை கொட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி தெருக்களிலும் பொது இடங்களிலும் கொட்டுப்பவர்களை கண்டிக்கும்விதமாக துப்புரவு தொழிலாளர்கள் , யார் குப்பை கொட்டுகிறார்களாலோ அவர்களது குப்பைகளை சேகரித்து அவருடைய வீட்டு வாசலில் கொண்டு சென்று போட்டுவிடுகின்றனர். நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.