தடுப்பூசியால் 3 மாத குழந்தை மரணமா? : சுகாதாரத்துறை விளக்கம்!

 

தடுப்பூசியால் 3 மாத குழந்தை மரணமா? : சுகாதாரத்துறை விளக்கம்!

கோவை மாவட்டம் மசகாளிபாளையம் அருகே உள்ள சுப்பண்ணா பகுதியை சேர்ந்த பிரசாத்- விஜயலட்சுமி தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை இன்று உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டதாகவும் தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தை அழுதுக் கொண்டே இருந்ததாகவும் இன்று மூச்சு பேச்சு இல்லாமல் குழந்தை உயிரிழந்ததாகவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசியால் 3 மாத குழந்தை மரணமா? : சுகாதாரத்துறை விளக்கம்!

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக விஜயலட்சுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், நிமோனியா நோய்த் தொற்றால் தான் குழந்தை உயிரிழந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தடுப்பூசியால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தடுப்பூசி போடப்பட்ட 14 குழந்தைகளில் 13 குழந்தைகள் நலமாக இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.