பெங்களூரில் 2 வயது குழந்தையின் வயிற்றிலிருந்து இரண்டு காந்தங்கள் அகற்றம்

 

பெங்களூரில் 2 வயது குழந்தையின் வயிற்றிலிருந்து இரண்டு காந்தங்கள் அகற்றம்

பெங்களூரு: பெங்களூரில் 2 வயது குழந்தையின் வயிற்றிலிருந்து இரண்டு காந்தங்களை மருத்துவர்கள் அகற்றினர்.

பெங்களூருவில் ஒரு 2 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக இரண்டு காந்தக துண்டுகளை விழுங்கி விட்டது. இதையடுத்து சாகரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்குழந்தையை சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே சோதனை நடத்தியதில், அதன் அடிவயிற்றுக்குள் இரண்டு காந்தக துண்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சையான லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தனர். இந்நிலையில், குழந்தையின் வயிற்றில் இருந்த காந்தங்களை அகற்றி மருத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். சரியான நேரத்தில் சிகிச்சை செய்யப்படாமல் போயிருந்தால் காந்தங்களால் அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமைந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.