“க்ளினிக்கிலேயே ஜாலியா இருக்கலாம் வர்றியா “-ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை.

 

“க்ளினிக்கிலேயே ஜாலியா இருக்கலாம் வர்றியா “-ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை.

ஒரு டாக்டர் தனது மனைவியின் கருவை கலைக்க முயற்சி செய்ததாக அவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“க்ளினிக்கிலேயே ஜாலியா இருக்கலாம் வர்றியா “-ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை.

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் நொய்டாவில் வசிக்கும் ஒரு பெண் மீரட்டில் பரிக்ஷித்கரில் உள்ள நாரங்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு டாக்டரை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் .அதன் பிறகு சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அந்த தம்பதிகளின் வாழ்வில் அந்த டாக்டரின் பழைய தில்லுமுல்லுகள் அந்த பெண்ணிற்கு தெரிய வந்தது .அதன் படி அந்த டாக்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளதாக அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது .இருந்தாலும் அந்த பெண் சகித்துக்கொண்டு அவரோடு குடும்பம் நடத்தி வந்தார் .
இந்நிலையில் அந்த பெண் திடீரென கர்ப்பமானார் .இதை கண்டு அந்த தாய் சந்தோஷப்பட்டார் .ஆனால் அந்த டாக்டர் கணவர் சங்கடப்பட்டார் .அதனால் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையை எப்படியாவது கலைக்க திட்டமிட்டார் .அதன்படி அவரும் அவரின் தாயாரும் சேர்ந்து கொண்டு அவருக்கு கொடுக்கும் உணவில் பல கருக்கலைக்கும் மருந்துகளை கலந்து கொடுத்தார்கள் .ஆனால் அவற்றை உண்ட பிறகும் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் கரு கலையாததால் அந்த டாக்டர் அந்த பெண்ணை தன்னுடைய க்ளினிக்கிற்கு கூட்டி சென்றார் .அப்போது அவரோடு உல்லாசமாக இருப்பது போல நடித்து ,அவரின் கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் .அதனால் அந்த டாக்டரின் மனைவி அதிர்ச்சியடைந்தார் .அதனால் அந்த க்ளினிக்கிலிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த டாக்டர் மீதும் அவரின் மாமியார் மீதும் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த டாக்டரின் குடும்பத்தை காவல் நிலையத்துக்கு வரவைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“க்ளினிக்கிலேயே ஜாலியா இருக்கலாம் வர்றியா “-ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை.