சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் பலி.. இன்று மட்டும் 11 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் பலி.. இன்று மட்டும் 11 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரழப்பது தான். நேற்று கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 33 வயதான மருத்துவர் உயிரிழந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒரு மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் பலி.. இன்று மட்டும் 11 பேர் உயிரிழப்பு!

தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 70 வயதான மருத்துவர் கடந்த மே 27 ஆம் தேதி வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் வரை நல்ல உடல்நலத்துடன் இருந்த அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.