இவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழுவின் திடீர் பரிந்துரை!

 

இவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழுவின் திடீர் பரிந்துரை!

கொரோனா தொற்று குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

மருத்துவ வல்லுநர் குழு பிரதமரிடம் அளித்துள்ள அறிக்கையின்படி, ” நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனை தருகிறது என்பதை உறுதி செய்த பிறகு தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழுவின் திடீர் பரிந்துரை!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முதன்மையாக கொள்ள வேண்டும் எனவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது. அதிகமாக நோய் தொற்று பரவும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம் என மருத்துவ குழு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது.

இவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழுவின் திடீர் பரிந்துரை!

டெல்டா வகை தொற்று பரவ அதிகம் உள்ள இடங்களுக்கு மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம் என்றும் இரண்டாவது டோசை செலுத்துவதற்கான கால இடைவெளி ஆனது 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.