அங்கீகரிக்கப்படாத ஆப் மூலம் கடன் வாங்காதீர்கள்- ரிசர்வ் வங்கி

 

அங்கீகரிக்கப்படாத ஆப் மூலம் கடன் வாங்காதீர்கள்- ரிசர்வ் வங்கி

ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்த விக்னேஷ் குமார் என்ற இளைஞர் ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன வாங்கி இருந்தார். அவர் கடனை திருப்பிச் செலுத்ததாதால் அவருடைய நண்பர்களுக்கு கடன் வாங்கியவர் குறித்து எஸ்எம்ஸ் அனுப்பியுள்ளது இந்த ஆப் நிறுவனம். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு இளைஞர் விக்னேஷ்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அங்கீகரிக்கப்படாத ஆப் மூலம் கடன் வாங்காதீர்கள்- ரிசர்வ் வங்கி

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம். ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது. கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது

அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.