எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

 

எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதன் விதிமுறைகளை பின்பற்றி, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலை துணியால் மூடப்பட்டு இருந்தது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை அக்கட்சியினர் அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

அப்போது அருகில் எம்ஜிஆர் சிலையில் தீப்பொறிப்பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிமுகவினர் திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.