கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

 

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக மகளிரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா தண்டபாணி ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது, நாள்தோறும் 5 ரூபாய் அளவிற்கு விலையை உயர்த்தி, 15 நாட்களில் 100 ரூபாய்க்கும் மேல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி இருப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், சிலிண்டர் விலை உயர்வை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.