“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

 

“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

வாக்குப்பதிவு ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் ஸ்டாலினின் ஒரு புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்தது. ஐபேக் அலுவலத்தில் பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலினும் அவரது மருமகன் சபரீசனும் ஆலோசனை மேற்கொண்டது போன்ற புகைப்படம் தான் அது. இந்தப் புகைப்படத்தை சில ஆளுங்கட்சிக்காரர்கள் பகிர்ந்து ரிசல்ட்டின் முடிவு இப்போதே தெரிந்துவிட்டது. தோல்வி பயத்தால் ஸ்டாலின் பிகேவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் என்றெல்லாம் கதை கட்டிவிட்டனர்.

“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

இவர்கள் இப்படி குஷியில் இருக்க மாலை வெளியானது அடுத்த புகைப்படம். அது ஒட்டுமொத்த குஷியையும் இறக்கிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் பிகேவும் சிரித்துக் கொண்டிருந்தது போல புகைப்படம் வெளியானதே அதற்குக் காரணம். வெற்றிக்களிப்பில் அவர்கள் சிரிப்பது போல உடன்பிறப்புகள் ஒரு கதையைக் கட்டினர். அதெல்லாம் இல்லை என்று மனதுக்கு மேல் கலாய்த்துக் கொண்டிருந்தனர் ஆளுங்கட்சி அனுதாபிகள். உண்மையில் நடந்தது என்ன? ஸ்டாலினுக்கு தோல்வி பயம் தானா என்று விசாரித்தால், விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

ஸ்டாலின் பிகேவுடன் ஆலோசனை மேற்கொண்டது வாக்குப்பதிவு நிலவரம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்காகத் தானாம். அதேபோல வாக்குப்பதிவு முடிந்தவுடன் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற ரிப்போர்ட்டையும் பிகே ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக 170க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று சொல்லியிருந்த பிகே, வாக்குப்பதிவு நிலவரத்தை வைத்துப் பார்த்தால் நெருக்கிப் பிடித்து 200 இடங்கள் வரை திமுக கூட்டணி ஜெயிக்கலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

அதேபோல அதிமுகவின் நிலைமை தான் படுமோசம். குறிப்பிட்ட சில அமைச்சர்களைத் தவிர்த்து அனேக அமைச்சர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ அத்துனை வாய்ப்புகளும் இருக்கிறதாம். 20 தொகுதிகளில் தாமரை மலர்வதற்கான அறிகுறியே தென்படவில்லையாம். பிகேவுடன் ரிப்போர்ட் வாங்கிய கையோடு சந்தோஷத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஸ்டாலின் போன் போட்டிருக்கிறாராம். தலைமையிடம் போன் வரவும் பதறியடித்தவர்களைச் சாந்தப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

“எத்தனை தொகுதிகள்?” – பிகே கொடுத்த லிஸ்ட்… தலைகால் புரியாத சந்தோஷத்தில் ஸ்டாலின்!

எத்தனை வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள், எப்படி இருப்பீர்கள் என்றெல்லாம் கேட்டு வெற்றிபெற வாழ்த்துகள் கூறினாராம். வேட்பாளர்களும் தங்கள் பங்குக்கு நீங்கள் தான் முதல்வர் என ஏகத்துக்கும் புகழ்ந்து பேசி வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். இப்படியாக நேற்றிரவு உரையாடல்கள் போய்க் கொண்டிருந்துள்ளன. இதனை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட தலைமைச் செயலக ஐஏஎஸ் அதிகாரிகள் பசையுள்ள துறைகளில் தங்களைப் பணியமர்த்த வாழ்த்து கூறி அடிபோட்டிருக்கிறார்களாம்… இதன்மூலம் அமைச்சரவை பட்டியலை அறிவாலய தரப்பு தயார் செய்துகொண்டிருக்க, கூடவே ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலும் இணைந்துகொண்டுள்ளது.