இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்!

 

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்!

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்!

அந்த புகாரின் பேரில் நேற்று காலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்!

அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில், திமுக நிர்வாகிகால மீது பொய் வழக்கு போடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.