ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை!

 

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை!

விருதுநகர்

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த கிருணாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் திமுக 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த இளைஞர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கைதாகிய அண்ணாமலை ஈஸ்வரன், ஜாமினில் வெளியே வந்திருந்தார்.

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை!

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை ஓட்டி நேற்று சேத்தூரில் உள்ள கரையடி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணாமலை ஈஸ்வரனை வழி மறித்த மர்மகும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டிஎஸ்பி தலைமையிலான சேத்தூர் போலீசார், அண்ணாமலை ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.