‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

 

‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டதை தொடர்ந்து, ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பிலான 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெறும். முதல் கட்டமாக சிறப்பு பொதுக் கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தி.மு.கழக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

நவம்பர் 1- ஈரோடு, நவம்பர் 2- புதுக்கோட்டை, நவம்பர் 3- விருதுநகர், நவம்பர் 5- தூத்துக்குடி, நவம்பர் 7- வேலூர், நவம்பர் 8 -நீலகிரி, நவம்பர் 9- மதுரை, நவம்பர் 10- விழுப்புரம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள்: திமுக அறிவிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் களப்பணி என தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக, ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதே போல அதிமுகவும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் எந்த கட்சி ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.