மின் கட்டண நிர்ணயத்தில் குளறுபடி; தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
Jul 21, 2020, 10:29 IST1595307557000
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனால் வரும் 21 ஆம் தேதி மின் கட்டண உயர்வை எதிர்த்து திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன் படி இன்று மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையைமீறி மின்வாரிய அலுவகம் எதிரே போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல, வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டின் முன் அவரும் அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.