கட்சி வேட்டிகளை எரித்து திமுகவினர் போராட்டம்!

 

கட்சி வேட்டிகளை எரித்து திமுகவினர் போராட்டம்!

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்தந்த கட்சிக்குள்ளே பல சர்ச்சைகளும் போராட்டங்களும் வெடித்து வருகின்றன. குறிப்பாக திமுக கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன.

கட்சி வேட்டிகளை எரித்து திமுகவினர் போராட்டம்!

இந்நிலையில் கள்ளக்குறிச்சி- உளுந்தூர் பேட்டை வேட்பாளர் மணிகண்ணனை மாற்றக்கோரி கட்சி வேட்டிகளை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை தொகுதியில் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் கட்சி வேட்டிகளை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் கூறிய நிலையில் அதை காதில் போட்டுக் கொள்ளாத கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளரை மாற்றவிட்டால் கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக கூறி போராட்டட்ம் நடத்திவருகின்றனர்.