அப்படி ஒரு நிலைமை மறுபடியும் வராது – கனிமொழி பேட்டி!

 

அப்படி ஒரு நிலைமை மறுபடியும் வராது  – கனிமொழி பேட்டி!

மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வாங்கும் நிலைமை மறுபடியும் வராது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த ஒரே காரணத்தால் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. அவர்கள் கூறிய அளவிற்கு ஆக்சிஜன் தர முடியவில்லை. இருந்தாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு பயன்படும் அளவுக்கு ஆக்சிஜன் விநியோகம் இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதால் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு தேவையில்லை என்பதால் ஆலையை மூடி விடலாம். பிறகு தேவைப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் ஆங்காங்கே ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வாங்க கூடிய நிலைமை மறுபடியும் வராது என்று கூறினார்.

அப்படி ஒரு நிலைமை மறுபடியும் வராது  – கனிமொழி பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், மூன்றாவது அலை அறிகுறி தெரியும் போதே தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் தொடங்கி விட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரத்தை குளிர்விக்கும் கருவியின் செயல்பாட்டை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுத்த முடியும். அதனால் தான் தற்போது குறைந்தபட்ச மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார். மேலும், 10 ஆண்டுகளில் அதிமுக செய்ய முடியாததை 100 நாட்களில் ஸ்டாலின் செய்துவிட்டார். அதனால் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் அதிமுகவை விமர்சித்தார்.