“அரை அம்மணமா முருகா முருகான்னு வர தயார்” – ஆ.ராசா ஆவேச பேச்சு!

 

“அரை அம்மணமா முருகா முருகான்னு வர தயார்” – ஆ.ராசா ஆவேச பேச்சு!

முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தினால் அலகு குத்திக்கொண்டு செல்ல தயார் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

“அரை அம்மணமா முருகா முருகான்னு வர தயார்” – ஆ.ராசா ஆவேச பேச்சு!

சென்னையை அடுத்த ஆவடியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய போது, “சாயிபாபாவை எத்தனை பேர் பார்க்கணும்ன்னு துடிச்சான்; சாயிபாபா கலைஞரை வந்து பார்த்தார். வேலை நாங்கள் வைத்தது தப்புன்னா எங்களை வந்து பார்த்த சாயிபாபாவை நீங்க என்ன பண்ண போறீங்க? நேத்து வரைக்கும் உங்க பக்கம் வருவாருன்னு சொல்லிட்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த ஆளு ஒரு நிகழ்ச்சியில என்ன சொன்னாரு தெரியுமா? நான் சாயிபாபாவை பார்க்க பலமுறை முயற்சி செய்து முடியல, சாயிபாபா கலைஞரை போய் பார்த்து இருக்காருன்னா, கலைஞருக்கு கடவுளை பிடிக்கவில்லை; ஆனால் கடவுளுக்கு கலைஞரை பிடித்திருக்கிறது என்றார்.

சாயிபாபாவும், ரஜினியும் கலைஞர் கிட்ட கடவுள் இருக்காருன்னு சொல்லும்போது, வேல் ஸ்டாலின் கிட்ட இருந்தா உங்களுக்கு என்ன பிரச்னை. இதுவரை கோயிலுக்கு போகாத; திராவிட கழகத்திலேயே வளர்ந்த ராஜா சொல்றேன், எல்லா முருகன் கோயிலையும் எடப்பாடி பழனிசாமி மூலமா, பிஜேபிகாரங்களுக்கு நான் சொல்றேன். இந்த வேலை தூக்கிட்டு ராஜா, அலகு குத்திக்கிட்டு, பட்டை போட்டுக்கிட்டு, அரை அம்மணமாக முருகா முருகான்னு வர தயார். அதுக்கு நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? எல்லா முருகன் கோயில்களிலும் சமஸ்கிருதத்துல ஓதுறதவிட்டுட்டு தமிழ்ல கந்த சஷ்டி கவசத்தை தமிழில் பாடுங்க. முருகனை தமிழ்க்கடவுள்-ன்னு சொல்லிட்டு சமஸ்கிருதத்துல பாடுறீங்க; முருகன்னு ஒருத்தன் இருந்தா, எடப்பாடி பழனிசாமியை சூரசம்ஹராம் செஞ்சிட்டு தமிழ்நாட்டை காப்பாத்துவாரு” என்றார்.