நாளை கூடுகிறது திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

 

நாளை கூடுகிறது திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் திமுகவின் தலைவர் பதவியை மு. கருணாநிதி தக்க வைத்திருந்த நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக மாபெரும் வெற்றி பெற்ற தனது பலத்தை நிரூபித்தது.

நாளை கூடுகிறது திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

இதன் மூலம் ஸ்டாலின் தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமையாக இருப்பார் என அரசியல் நோக்கர்கள் கணித்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினார் ஸ்டாலின்.1967 ஆம் ஆண்டு 14 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மிசா சட்டத்தில் கைது செய்து, 6 மாதங்கள் சிறை தண்டனை என ஒரு முழு அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பணியாற்றிவரும் ஸ்டாலின் மேயர் ,எம்எல்ஏ ,அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என படிப்படியாக உயர்ந்து தற்போது முதல்வர் என்கின்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர போகிறது.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.