திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் கொரோனாவால் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி!

 

திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் கொரோனாவால் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 1,65,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ் பலரையும் உயிரிழக்க செய்துள்ளது. அந்த வகையில் திமுக பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் கொரோனாவால் பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 16 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களான ஓசூர் சத்யா, தளி பிரகாஷ், வேப்பணம்பள்ளி முருகன் ஆகியோரை சந்தித்த பிறகு, செங்குட்டுவன் சிறிது நேரம் ஊர்வலம் சென்றுள்ளார். ஊர்வலம் சென்று முடிந்த பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு நேற்று ஓசூரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய.வந்துள்ளது. அதனால் அவர் நேற்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.