கொரோனா சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் குணமடைந்தார்!

 

கொரோனா சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் குணமடைந்தார்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பலரையும் உயிரிழக்க செய்துள்ளது. அந்த வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பல அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் குணமடைந்தார்!

கடந்த 18 ஆம் தேதி திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கடந்த 19 ஆம் தேதி வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸால் திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.