குடிபோதையில் சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக பிரமுகர்… சர்ச்சையை கிளப்பிய ஆடியோ!

 

குடிபோதையில் சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக பிரமுகர்… சர்ச்சையை கிளப்பிய ஆடியோ!

சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியில் வசித்து வருபவர் மகாராஜா மணிகண்டன். சமூக ஆர்வலரான இவர் அப்பகுதி மக்களுக்காக சட்டரீதியாக போராடுவது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தபோது இவர் திமுகவுக்கு எதிராக வாட்ஸ் அப் குழு ஒன்றில் பேசியிருக்கிறார்.

குடிபோதையில் சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக பிரமுகர்… சர்ச்சையை கிளப்பிய ஆடியோ!

அதைக்கேட்ட வீரகனூர் திமுக செயலாளர் அழகுவேல், மணிகண்டனை நேரில் சென்று மிரட்டியுள்ளார். திமுக பற்றி பேசினால் கொலை செய்துவிடுவேன் என குடிபோதையில் தனது நண்பர்களுடன் சென்று மிரட்டியிருக்கிறார். நேரில் சென்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் செல்போனிலும் அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த ஆடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், அழகுவேல் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் மீது வழக்கு போடவில்லையாம். திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடீசம் தலைதூக்கும் என்பதே மக்களின் கருத்து. இதை நொடிக்கு நொடி அக்கட்சியின் உறுப்பினர்களும் பிரமுகர்களும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரங்களின் போதே அது வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.